சென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டக் களத்தில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம்.. தொடரும் போராட்டம்
Recommended Video
சென்னை: வண்ணாரப்பேட்டை குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம் நடந்தது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றிற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதையடுத்து சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ஆம் தேதி முதல் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.
வண்ணாரப்பேட்டை சிஏஏ போராட்டக் களத்தில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம்.. #CAA_NRC_NPR #washermanpet pic.twitter.com/8hpkcjTwma
— Oneindia Tamil (@thatsTamil) February 17, 2020
வண்ணாரப்பேட்டை கலவரத்திற்கு எனது பேச்சு காரணம் இல்லை.. என்ன பேசினேன் தெரியுமா? லியோனி விளக்கம்
அப்போது போலீஸார் அவர்களை கலைந்து போக கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். பதிலுக்கு போலீஸார் மீது போராட்டக்காரர்களும் கல் எறிந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லீம் அமைப்புகள் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு ஜோடிக்கு இந்த போராட்டக் களத்தில் திருமணம் நடைபெற்றது.