26 வயது பெண்ணை.. நாசம் செய்து.. வீடியோ எடுத்து.. பலமுறை மிரட்டி.. 2 சைக்கோ கொடூரர்கள்!
சென்னை: 26 வயது பெண்ணை.. நாசம் செய்து.. வீடியோ எடுத்து.. பலமுறை மிரட்டி.. திரும்ப திரும்ப சீரழித்துள்ளனர் 2 சைக்கோ கொடூரர்கள்!
சென்னை, விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது கணவர் சங்கர்.. இவர் கார்பென்ட்டராக வேலை பார்க்கிறார். அதனால், கார்த்திகாவை இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டார். கார்த்திகாவுக்கு 26 வயதாகிறது!
கடந்த 3 மாசமாக சங்கர் வெளியூருக்கு வேலை விஷயமாக சென்றுவிட்டார். சம்பவத்தன்று, வீட்டிற்கு வெளியில் கார்த்திகா நின்றிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்குமார், ரமேஷ்குமார் ஆகிய 2 இளைஞர்கள், கோயில் பிரசாதம் என்று ஒரு இனிப்பை தந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் பகுதியில் இருந்த கோயிலில் விழா நடந்து முடிந்திருந்தது.
சுடிதார் பேன்ட்டைகூட இறுக்கி கட்ட தெரியாது.. பயப்படுவா.. அவள் எப்படி தூக்கில்.. கதறும் பாத்திமா தாய்

மயக்கம்
அதனை வாங்கி சாப்பிட்ட கார்த்திகா சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனே 2 பேரும் யாரும் பார்க்காத வகையில் வீட்டுக்குள்ளேயே தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதை வீடியோவும் எடுத்து கொண்டனர். போற போக்கில் கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி சங்கிலியையும் பறித்து கொண்டு சென்றுள்ளனர்.

நடுங்கி அழுதார்
இதன்பின்னர், எடுத்த வீடியோவை, கார்த்திகாவுக்கு அனுப்பி வைத்தனர்.. இதை கண்டு மிரண்டு போன கார்த்திகா, பயந்து நடுங்கி உள்ளார். தாலி செயினை மட்டும் தந்துவிடும்படி அழுதுள்ளார். நேரில் வந்தால் தருகிறோம் என்று சொல்லவும், அதை நம்பி கார்த்திகா சென்றுள்ளார். ஆனால், திரும்பவும் 2 பேரும் சேர்ந்து பெண்ணை நாசம் செய்து திருப்பி அனுப்பினர்.. இவர்களை தவிர, மேலும் சில நண்பர்களையும் வரவழைத்து, கூட்டு பாலியல் கொடுமை நடந்துள்ளது.

சைக்கோ நபர்கள்
அந்த 2 பேருமே சைக்கோ நபர்களாம்.. ஒரு மாதத்துக்கு கார்த்திகாவை அங்கு வா, இங்குவா என்று சொல்லி திரும்ப திரும்ப சீரழித்துள்ளனர். இந்த சமயத்தில்தான் வெளியூர் போன கணவன் வந்ததும், மனைவியின் நடவடிக்கையை கண்டு அதிர்ந்தார்.. தாலி எங்கே, என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கிறாய்? என்று கேட்கவும்தான், நடந்தவைகளை சொல்லி கதறி அழுத கார்த்திகா, வீடியோவையும் காட்டி உள்ளார்.

புகார்
ஆத்திரமடைந்த கணவன், உடனடியாக விருகம்பாக்கம் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார். ஆனால்,, நகைபறிப்பு புகாரை மட்டும் பெற்றுக்கொண்ட போலீசார், நகைக்காக 90 ஆயிரம் ரூபாய் பெற்றுத் தருவதாகக்கூறி, முதற்கட்டமாக 50 ஆயிரம் பெற்று தந்துள்ளனர். உரிய விசாரணை எதுவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கவில்லை என தெரிகிறது.

வழக்கு பதிவு
ஸ்டேஷன் வரை விஷயம் சென்றும், சம்பந்தப்பட்ட 2 சைக்கோவும், கார்த்திகா வீட்டு பக்கத்திலேயே சுற்றி சுற்றி வந்தனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்தே, 3 முறை தற்கொலை முயற்சிக்கும் போய்விட்டார் கார்த்திகா.. இதையடுத்துதான், கணவர் கமிஷனர் ஆபீசில் புகார் தந்தார். அந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2 சைக்கோ பாலியல் கொடூரர்கள் 2 பேர் மீதும் வடபழனி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் 2 பேரும் தலைமறைவாக உள்ளதால், தேடி வருகிறார்கள்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!