நாளைய தீர்ப்புன்னும் கூட பிரெடிக்ட் பண்ணி இருக்கிறேன்-விஜய் எதிர்காலம் - எஸ்.ஏ.சி சூசக பேச்சு
சென்னை: நாளைய தீர்ப்பு என்று கூட விஜய்யின் எதிர்காலம் குறித்து ஏற்கனவே கணித்து இருக்கிறேன்.. அது என்ன என்பது காலம் தீர்மானிக்கும் என்று அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் சூசகமாக தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட ஆடியோர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோட் சூட் உடையுடன் வந்திருந்த விஜய், முகத்தில் பெரிதாக மகிழ்ச்சியை காட்டிக் கொள்ளவில்லை. லேசான புன்னகையுடன் அரங்கில் பிரமுகர்களுடன் கை குலுக்கினர்.
விஜய் இறுக்கம்
பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது முதல் மிகவும் உக்கிரமாக ஒருவித இறுக்கம், கோபத்துடன் அரங்கில் அமர்ந்திருந்தார் விஜய். அண்மை நாட்களாக விஜய்யை படாதபடுத்திய வருமான வரிசோதனை, அரசியல் அழுத்தங்கள் ஆகியவற்றின் காரணமாக விஜய் இறுக்கமாக இருந்திருக்கலாம் என கருதப்பட்டது.
ஆரத் தழுவிய விஜய்
பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது முதல் மிகவும் உக்கிரமாக ஒருவித இறுக்கம், கோபத்துடன் அரங்கில் அமர்ந்திருந்தார் விஜய். அண்மை நாட்களாக விஜய்யை படாதபடுத்திய வருமான வரிசோதனை, அரசியல் அழுத்தங்கள் ஆகியவற்றின் காரணமாக விஜய் இறுக்கமாக இருந்திருக்கலாம் என கருதப்பட்டது.
இயக்குநர் எஸ்ஏசி
அப்போது, எஸ்.ஏ.சியிடம், நீங்க மாஸ்டர் விஜய்னு ஏற்கனவே பிரெடிக்ட் பண்ணியிருக்கீங்க என்று ஒரு கூறி ஒரு ஏவி வெளியிட்டனர். முதலில் இதை எஸ்.ஏ.சியால் புரிந்து கொள்ள முடியவில்லை. பின்னர்தான் எஸ்.ஏ.சியின் பழைய படம் ஒன்றின் டைட்டிலில் மாஸ்டர் விஜய் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத்தான் தொகுப்பாளர்கள் சுட்டிக் காட்டினர்.
நாளைய தீர்ப்பு படம்
இதை புன்னகையுடன் எதிர்கொண்ட எஸ்.ஏ.சி. சட்டென நான் நாளைய தீர்ப்பு என்று இன்னொன்றையும் பிரெடிக்ட் செய்திருக்கிறேன்.. என்றார். அதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர், அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம் என்று கூற, நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியலை.. நான் நினைப்பது வேற என பொடி வைத்து அந்த பேச்சை முடித்துக் கொண்டார் எஸ்.ஏ.சி.
அப்ப மாண்புமிகு மாணவன்?