வைகோவை சந்தித்து ஆசிபெற்ற தயாநிதி... திமுக கூட்டணிக்கு வெற்றி என முழங்கிய புரட்சி புயல்
சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள், 18 சட்டசபை தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கையுடன் கூறி உள்ளார்.
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் வைகோவிடம் அவர் வாழ்த்து பெற்றுள்ளார்.
அதே போன்று மற்றொரு திமுக வேட்பாளரான கலாநிதியும் வைகோவை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
40 லோக்சபா தொகுதிகள், 18 சட்டசபை தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். 20ம் தேதி திருவாரூரில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தமது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
கீதா ஜீவன் பேசிய தேவையில்லாத பேச்சு.. கனிமொழிக்கு எதிராக திரும்புமா.. கவலையில் திமுக!
நான் தூத்துக்குடியில் இருந்து பிரச்சாரம் தொடங்குகிறேன். கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்து எனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறேன்.
இந்த தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும். மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும். சனாதன கோட்பாடுகள், சனாதன முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.