சென்னையில் நாளை கூடுகிறது மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம்
சென்னை: சென்னையில் நாளை காலை மதிமுக உயர்நிலை குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. மதிமுக உயர்நிலைக் குழுவுடன், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தகூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. கட்சியின் வளர்ச்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் போன்றவை குறித்தும், இதில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கழகங்களை அகற்றுவோம்.. கமல்ஹாசன் அதிரடி அரைகூவல்.. கடன் சுமை பற்றி காட்டம்
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவது, போராட்டக் களம், மற்றும் வியூகங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
சமீபகாலமாக வைகோ ராஜ்யசபா தவிர்த்து வெளியில் அதிகம் உரையாற்றுவதில்லை. அதிகமாக பேட்டி கொடுப்பதும் இல்லை. மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் வைகோ பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.