ஐடி ரெய்டு.. அன்புச்செழியன் மட்டும் இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டா என்ன ஆகும்? தெறிக்கும் மீம்
சென்னை: நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் அன்புச் செழியன் வீடுகளில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தியது நீங்கள் அறிந்ததுதான்.
இதுதொடர்பாக பல்வேறு மீம்கள் சமூக வலைத்தளங்களில் றெக்கை கட்டி பறக்க தொடங்கியுள்ளன. ஏற்கனவே ரஜினிகாந்த்துக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கை தொடரப்போவதில்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென விஜய் வீட்டில் ரெய்டு நடக்க, 2க்கும் முடிச்சுப் போட்டு யூகங்களும் ஓடுகின்றன.
இதனிடையே அன்புச்செழியன் வீட்டில், கணக்கில் வராத ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த வருமானத்திற்கு அவர் என்ன கணக்கு சொல்வார் என அவர் ரசிகர்கள் மண்டையை பிய்ச்சிக் கொண்டிருக்க, ஒரு மீம் கண்ணில் பட்டது.
இப்ப அந்த 65 கோடிய ரஜினிகிட்ட தான் வட்டிக்கு வாங்குனேன்னு அன்புசெழியன் சொல்லணுமாம்.. pic.twitter.com/dwjqGNM2od
— இட்லி (@Raittuvidu) February 6, 2020
அதாவது, கணக்கில் வராத பணத்தை ரஜினியிடம் வட்டிக்கு வாங்கினேன் என அன்புச்செழியன் சொன்னால் இப்போ கணக்கு சரியாக வந்துவிடுமல்லவா என்று கேட்கிறது அந்த ட்வீட். ஏனெனில், வருமான வரித்துறையிடம் ரஜினி அளித்த பிரமாணப் பத்திரத்தில் தான் வட்டிக்கு பணம் விட்டிருந்ததாக கூறியிருந்தார். இந்த தகவலை ரஜினியுமே நேரடியாக மறுக்கவில்லை.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தான் ஒரு நேர்மையான வரி செலுத்தும் நபர் என்று மட்டுமே அவர் பதிலளித்திருந்தார். எனவே, ரஜினியிடம் வட்டிக்கு வாங்கினேன், என்று அன்புச் செழியன் சொன்னால், இப்போ வருமான வரித்துறை ஒன்றும் செய்ய முடியாதல்லவா என கேட்கிறது இந்த மீம். இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளுடன் வைரலாக பரவி வருகிறது.