பரபரப்பான வழக்குகளில் சிக்கினாலே மனச்சிதைவுக்கு ஆளாகிவிடுகிறார்களே!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பரபரப்பான வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் நபர்கள் அடுத்தடுத்து மனச்சிதைவுக்கு ஆளாவது தொடர்கதையாகி வருகிறது.
2016-ம் ஆண்டு மிகப் பெரும் பரபரப்பை கிளப்பியது சுவாதி படுகொலை வழக்கு. இந்த வழக்கில் தொடக்கத்தில் மதச்சாயம் பூசப்பட்டது.
பின்னர் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர்தான் சுவாதியை படுகொலை செய்தார் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் ராம்குமாருக்கும் சுவாதிபடுகொலைக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை எனவும் கூறப்பட்டது.
திகில் தரும் நிர்மலாதேவி அவதாரம்.. தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ்
ராம்குமார் மர்ம மரணம்
இந்நிலையில் சென்னை புழல் சிறையில் ராம்குமார் மின்கம்பிகளை கடித்து தற்கொலை செய்து கொண்டார்; மனச்சிதைவால் அவர் தற்கொலை செய்து கொண்டாகவும் கூறப்பட்டு அந்த வழக்கும் முடிவுக்கு வந்தது.
முகிலன் திடீர் மாயம்
அதேபோல் சமூக செயற்பாட்டாளர் முகிலனும் திடீரென மாயமானார். 5 மாதங்களுக்குப் பின்னர் திருப்பதியில் முகிலன் கைது செய்யப்பட்டு தற்போது தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளார்.
முகிலனை மனநோயாளியாக்க சதி
முகிலனும் மனச்சிதைவுக்குள்ளாகி இருப்பதாக அவரது மனைவி மற்றும் நண்பர்கள் கூறியுள்ளனர். தன்னை மனநோயாளியாக்க சதி நடந்தது என முகிலும் கூறி வருகிறார்.
நிர்மலாதேவிக்கும் மனச்சிதைவு
முகிலன் விவகாரம் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியும் மனச்சிதைவுக்குள்ளான நிலையில் 2 நாட்களாக பரபரப்பை கிளப்பி வருகிறார். நீதிமன்றத்தில் அமர்ந்து தியானம், தர்காவில் தலைவிரிகோலமாக கதறல் என நிர்மலாதேவியால் ஏகப்பட்ட பரபரப்புகள்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிற வழக்குகளில் சிக்குகிறவர்கள் அனைவருமே மனச்சிதைவுக்குள்ளாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.