நாளை சீன அதிபர் வரும் போது மெட்ரோ ரயிலும் நிறுத்தப்படுகிறது.. சின்னமலை-மீனம்பாக்கம் இடையேதான்!
Recommended Video
சீன அதிபர் வரும் போது சின்னமலை-மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் நிறுத்தப்படும்
நாளை சீன அதிபர் வரும் போது மெட்ரோ ரயிலும் நிறுத்தப்படுகிறது.. சின்னமலை-மீனம்பாக்கம் இடையேதான்!
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வரும் நேரத்தில் சின்னமலை-மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வருகிறார். இதேபோல் நாளையே பிரதமர் மோடியும் சென்னை வருகிறார். இவர்கள் இவரும் ஒரே நாளில் சென்னை வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளன.
குறிப்பாக சீன பிரதமர் ஜி ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக சென்னை அருகே மகாபலிபுரத்திற்கு வருவதால் இதுவரை சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழர்- சீனர்கள் உறவின் தொடக்கப் புள்ளியான போதிதருமனின் பூர்வோத்திரம் என்ன?
போக்குவரத்து மாற்றம்
பொதுவாக பிரதமர் மோடி வரும் போது கூட சென்னையில் போக்குவரத்தில் பெரிய மாற்றங்கள் இதுவரை செய்யப்பட்டது கிடையாது. ஆனால் சீன அதிபரின் வருகைக்காக நேர வாரியாக போக்குவரத்தை திருப்பிவிடும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாரம்பரிய வரவேற்பு
சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வந்திறங்குகிறார். அவருக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் அளிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் வரவேற்பு அளிக்க உள்ளார்கள்
அரைமணி நேரம் நிறுத்தம்
சீன அதிபர் வரும் நேரத்தில் விமான நிலையத்தையொட்டி அமைந்துள்ள ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் விமான நிலையத்தில் இறங்கி அவர் ஓட்டல் செல்லும் வரை அதாவது 1.30 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ரயில்கள் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.
சிறுது நேரம் நிறுத்தம்
குறிப்பாக சீன அதிபர் வரும் நேரத்தில் சின்னமலை முதல் மீனம்பாக்கம் வரையில் மெட்ரோ ரெயில்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோல் புறநகர் மின்சார ரயில் சேவையிலும் சிறிதுநேரம் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.