கவலைக்கிடமான நிலையில் மேட்டூர், முல்லைப் பெரியாறு நீர்மட்டம்.. மழை வந்து காக்குமா?
சென்னை: மேட்டூர் அணையில் நீர் மட்டம் 45 அடியாக உள்ளது.
தமிழகத்தின் உயிர்நாடி அணைகளில் நீர் மட்டம் பெரும் கவலைக்குரியதாக உள்ளது. மழை பொய்த்ததாலும், வறட்சி அதிகரித்திருப்பதாலும் அணைகளும் வறண்டு போய் காணப்படுகின்றன.
தமிழகத்தின் உயிர் நாடி அணைகள் அனைத்தும் கவலைக்கிடமான அளவிலேயே நீர்மட்டத்தைக் கொண்டுள்ளன. ஜூன் 8ம் தேதி காலை நிலவரப்படி தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் கீழ் வருமாறு:
மேட்டூர் அணை:
மேட்டூர் அணை நீர்மட்டம் 45.69 அடி (மொத்த கொள்ளளவு 120 அடி).
நீர்இருப்பு : 15.20 டி.எம்.சி.
நீர் வரத்து : வினாடிக்கு 328 கன அடியிலிருந்து 791 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர் திறப்பு : குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மழையளவு : 40.80 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
முல்லைப்பெரியாறு:
நீா் மட்டம் - 112.00 அடி (அனுமதிக்கப்பட்ட கொள்ளளவு 136 அடி).
நீா் இருப்பு -1231 மி.க.அடி.
வரத்து -70 கனஅடி
வெளியேற்றம்- விநாடிக்கு 70 கன அடி
வைகை அணை:
நீா் மட்டம் - 34.25அடி.
நீா் இருப்பு-566மி.க.அடி.
நீர் வரத்து - இல்லை
வெளியேற்றம்- விநாடிக்கு 60 கனஅடி