நாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு
சென்னை: தமிழக அரசு அனைத்து வகையான ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி உள்ளது. இதன்படி தமிழகத்தில் பால் விலை எவ்வளவு என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உயர்த்தி அறிவித்தது. பச்சை, நீலம், ஆரஞ் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. அதன்பிறகு 5 ஆண்டுகளுக்கு பின் இப்போது பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி ஆவின் பால் விலை லிட்டரில் ( மாதாந்திர அட்டை வைத்திருப்போருக்கு)
நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) பழைய விலை ரூ.34 ஆக இருந்தது. இனி நாளை முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
பச்சை பால் (சமன்படுத்தப்பட்டது) பழைய விலை 39 ரூபாயாக இருந்தது. இனி 45 ரூபாய்க்கு விற்கப்படும்.
ஆரஞ்சு பால் (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது) பழைய விலை ரூ.43 ஆக இருந்தது. இனி 49 ரூபாய்க்கு விற்கப்படும்.
மெஜந்தா பால் (கொழுப்பு சத்து நீக்கப்பட்டது) லிட்டர் 35 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இனி ரூ.41க்கு விற்கப்பட உள்ளது.
இனி சில்லறை விற்பனையில் பால் விலை உயர்வு
நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) பழைய விலை ரூ.37 ஆக இருந்தது. இனி நாளை முதல 43 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
பச்சை பால் (சமன்படுத்தப்பட்டது) பழைய விலை 41 ரூபாயாக இருந்தது. இனி 47 ரூபாய்க்கு விற்கப்படும்.
ஆரஞ்சு பால் (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது) பழைய விலை ரூ.45 ஆக இருந்தது. இனி 51 ரூபாய்க்கு விற்கப்படும்.