அமைச்சர்னா இப்படி இருக்கணும்.. இதுதான் டெடிகேஷன்.. சபதம் போட்டு மானாமதுரையை வலம் வரும் பாஸ்கரன்... !
அமைச்சர்னா இப்படி இருக்கணும்.. இதுதான் டெடிகேஷன்.. சபதம் போட்டு மானாமதுரையை வலம் வரும் பாஸ்கரன்... !
Recommended Video
சென்னை: வாக்கு.. சத்தியம்.. உறுதி இதெல்லாம் இல்லை.. சபதமே போட்டுட்டாராம் அமைச்சர் பாஸ்கரன்!
தமிழக கதர் கிராம அமைச்சர் பாஸ்கரன். இவர் சிவகங்கையை சேர்ந்தவர். மாவட்ட அதிமுக முக்கிய புள்ளிகளிடம் அமைச்சர் பேசும்போது சொன்னதாவது:
"எனக்கு எம்பி தேர்தலை விட இந்த இடைத்தேர்தல்தான் ரொம்ப முக்கியம். இதே மானாமதுரை தொகுதிக்கு 13 பேர் சீட் கேட்டிருக்காங்க. யாருக்கு சீட் கிடைச்சாலும் சரி, மீதி பேர் சிறப்பா வேலை பார்க்கணும். எல்லாரும் ஒத்துமையா இருக்கணும்.
மானாமதுரையை என் சொந்த தொகுதிபோல் நினைச்சு வேலை பார்த்துட்டு வர்றேன். நீங்களும் அப்படித்தான் இருக்கணும். பூத் கமிட்டியில் இருப்பவர்கள் தினமும் வாக்காளர்களை சந்தித்து ஓட்டுகளை சேகரிக்கணும்" என்று கேட்டு கொண்டுள்ளாராம்.
சூப்பர்.. வாரம் ஒருவர் விடுதி செல்வோம்.. பஹ்ரைன் தமிழர்களின் அசத்தல் கொண்டாட்ட விழா
ஆனால், விஷயம் என்னவென்றால், தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அதிமுகவுக்கு உள்ளது. அதாவது 9 சீட்களை பெற்றால்தான் அரசு தப்பும் என்ற நிலை இருக்கிறது.
இதில், எங்கே பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தாமும் சேர்ந்து வீட்டுக்கு போய்விடும் நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்று நினைத்து வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்க்கிறாராம் அமைச்சர் பாஸ்கரன்! அதுமட்டுமில்லை, "மானா மதுரை இடைத்தேர்தலில் ஜெயிக்காமல் இந்த தொகுதியை விட்டு வெளியே வரமாட்டேன்" என்று சபதமே போட்டுள்ளாராம்!