விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா.. அமைச்சர் பாஸ்கர்
சென்னை: விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா என அமைச்சர் பாஸ்கர் தெரிவித்தார்.
கட்சித் தொடங்குவதற்கு முன்பிலிருந்தே கமல்ஹாசன், ஆட்சியாளர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில் கட்சி தொடங்கியதும் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தார். அதில் அவருக்கு 4-ஆவது இடத்தை மக்கள் அளித்தார்கள்.
மொத்தமாக 4 சதவீதம் வாக்குகளை அவரது கட்சி பெற்றிருந்தது. இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்த சேலம் ஓமலூருக்கு முதல்வர் எடப்பாடி சென்றார். அங்கு செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வயதானதால்தான் நடிகர்கள் கட்சி தொடங்குகிறார்கள்.
போலி சான்றிதழ்.. டுபாக்கூர் டைம்ஸ் கவர்.. டிரம்ப் ஆபீஸ் கண்ணில் மண்ணைத் தூவிய பலே பெண்!
கமல்ஹாசன் தான் பெரிய தலைவராச்சே. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டியதுதானே. அரசியல் பற்றி கமலுக்கு என்ன தெரியும்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் வயதான பின்பு நடிகர்கள் அரசியலுக்கு வந்துவிடுவார்கள் என்றும் முதல்வர் கூறியிருந்தார். இதுகுறித்து அமைச்சர் பாஸ்கரன் கூறுகையில், இனி வரும் காலங்களில் நடிகர்களின் அரசியல் செல்லுபடியாகாது. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆயிற்று என பார்த்தீர்களா என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.