பாஜகவின் அடிவருடிதான் அமமுக.. கடுமையாக விமர்சிப்பதில்லை கவனீச்சிங்களா? ஜெயக்குமார் சுளீர்
Recommended Video
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாஜகவின் அடி வருடி என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மூவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு விளக்கம் கேட்டு தமிழக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அந்த நோட்டீசுக்கு இடைக்காலத்தடை விதித்த சுப்ரீம் கோர்ட், அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 3 எம்.எல்.ஏ கள் தகுதி நீக்கம் குறித்த நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் அவர் பேசியதாவது, சந்தர்பவாதத்தின் ஒட்டுமொத்த உருவம் அமமுக. பாஜகவின் அடிவருடி அம்மா மக்கள் முன்னேற்றகழகம். அமமுக பாஜகவை கடுமையாக விமர்சிக்குமா??
பாஜகவின் தயவு அமமுகவிற்கு தேவை. அமமுகவை போல் நாங்கள் இரட்டை வேடம் போடமாட்டொம். டெல்லி பல்கலைகழகத்தில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என கூறிய அரவிந்த் கேஜிர்வாலுக்கு கண்டனம்.
எல்லாம் நன்றாக நடந்தால்.. பிரதமர் ஆசையை வெளிப்படுத்தினார் மாயாவதி.. தேசிய அரசியலில் திருப்பம்!
துரைமுருகன், கனிமொழியை வருமான வரித்துறையிடம் காட்டி கொடுத்தது ஸ்டாலின், அதற்கு பழிவாங்கும் விதமாகதான் ஸ்டாலின் ஜனாதிபதியாவார் என துரைமுருகன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.