புலி மீதே கை வைத்து போஸா??.. ஜெயக்குமாருக்கு செம தைரியம்தான்..!
Recommended Video
சென்னை: தாய்லாந்தில் உயிரியல் பூங்கா ஒன்றில் புலி ஒன்றுடன் அமைச்சர் ஜெயக்குமார் போஸ் கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக அரசின் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அதிரடியாக பதில் அளிப்பவர் அமைச்சர் ஜெயக்குமார். இவரது பதில் சிரிப்பையும் சிந்திக்கவும் வைக்கும். அந்த வகையில் இவருக்கென ரசிகர்கள் உண்டு.
தாய்லாந்து நாட்டில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் புலி அருகில் அமர்ந்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். pic.twitter.com/kAUli0iSSL
— T Muruganandham (@muruga_TNIE) October 14, 2018
அமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் தாய்லாந்து நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள உயிரியல் பூங்காவுக்குச் சென்ற அவர் அச்சமின்றிப் புலியைத் தடவிக்கொடுத்தார். புலியின் முதுகில் கைவைத்தும் அதன் வாலைப் பிடித்தும் வருடிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.
அதுபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் இந்தியா சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் மடியில் சிங்கக் குட்டி இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகியது.
அந்த படத்தை விளக்கி அமைச்சர் கவிதையும் வெளியிட்டிருந்தார். அந்த கவிதை பின்வருமாறு:
வீரமிகு தமிழ்நாட்டின்
தீரமிகு தமிழ்மகன்
சிங்கமென வந்ததை அறிந்த-
சிங்கக்குட்டி ஒன்று
தந்தையென நினைத்து
தாவி அமர்ந்தது
என்று கவிதை எழுதியிருந்தார். அது போல் தாய்லாந்தில் புலிக்குட்டியுடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
[இதென்ன சோதனை.. ஹோட்டலில் சர்வர் வேலை செய்யும் "சந்திரபாபு நாயுடு".. வைரலாகும் வீடியோ!]