சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்றும் இன்றும் என்றும் அம்மா.. பச்சைக் கலரில் ஜெயக்குமார் நெகிழ்ச்சி வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, "அன்றும் இன்றும் என்றும் "அம்மா" என்று தன் கைப்பட பச்சை கலரில் வாழ்த்து செய்தியை எழுதி கையெழுத்து போட்டுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

ரொம்ப ரொம்ப மனசை பாதிக்கிற அது நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் அதை தன் லெட்டர் பேடில் கைப்பட எழுதி வெளிப்படுத்துபவர் அமைச்சர் ஜெயக்குமார்.

Minister Jayakumar pay tribute to Jayalalitha

ஜெயலலிதா பிறந்த நாள் என்பதால், இன்றும் எழுதி மரியாதை செலுத்தி உள்ளார். அதில், "பிப்ரவரி-24 அன்றும் இன்றும் என்றும் அம்மா" என்ற தலைப்பில் எழுதி இருப்பதாவது:

அன்று அம்மாவின் நிழலில் விழுதாய்!
இன்று அம்மாவின் நினைவில் விதையாய்!
என்றும் அம்மாவின் வழியில் விசுவாசியாய்!
கலங்கும் இதயத்தில் மறையாத
நினைவுகளுடன், நீங்கள் விட்டுச்சென்ற
லட்சிய பாதையில்
என்றும் தொடரும்
எங்கள் - பயணம்! -
டி.ஜெயக்குமார்" - என்று பச்சை கலரில் எழுதி கையெழுத்து போட்டுள்ளார். கையெழுத்து பார்க்க நன்றாகவே இருக்கிறது.

இதன் பக்கத்திலேயே ஒரு விளம்பரம் போடப்பட்டுள்ளது. அது 1990-ம் ஆண்டு ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, "நமது எம்ஜிஆர்" பத்திரிகையில் ஜெயக்குமார் பதிவிட்டது. அப்போது ஜெயக்குமார் எம்ஜிஆர் இளைஞர் அணியிலும், ராயபுரம் தொகுதி துணை தலைவராகவும், இருந்த சமயம் போலும்.

அந்த விளம்பரத்தில் ஜெயக்குமார் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. பேன்ட்-ஷர்ட் போட்டுக்கொண்டு அமைச்சர் ஜெயக்குமார் ஸ்மார்ட் லுக்குடன் இருக்கிறார். கிட்டத்தட்ட 28 வருடங்களாக அம்மாவின் விசுவாசி என்பதை இந்த ஒரே ஒரு லட்டர்பேட் பிறந்த நாள் வாழ்த்துமூலம் நிரூபித்துவிட்டார் அமைச்சர்!

English summary
Minister Jayakumar wrote Poem "Andrum Endrum Amma" for Jayalalitha's Birthday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X