சே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்!
அலிபாபாவும் 40 திருடர்களும் திமுகதான் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: "ச்சே.. ச்சே.. சீமான் சொல்லும் 40 திருடர்கள் திமுகவினரைதான்.. அலிபாபாவும் 40 திருடர்களும்" என்று அதிமுக மீதான சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி தந்துள்ளார்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி சென்ற சீமான், நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் ஆஜரானார்.
அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுக அரசை கடுமையாக சாடினார். "அலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர்.. என்ன இப்போது அம்மா இல்லை, திருடர்கள் தான் உள்ளனர்" என்று பேசியிருந்தார். சீமானின் இந்த சர்ச்சை பேச்சு அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி தந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சசிகலாவை ஆட்சியில், கட்சியிலும் சேர்க்கக்கூடாது என ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டுள்ளது. சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை. இதே நிலை தான் நீடிக்கும். இது கட்சி எடுத்த முடிவு. தனிப்பட்ட கருத்து இல்லை. நடிகர்கள் இனி ஆட்சிக்கு வருவது முடியாத காரியம், கமல் திரைப்படத்தில் நடித்தால் மட்டும் முதல்வராகிவிட முடியாது. சீமான் கூறும் 40 திருடர்கள் திமுகவினரைத்தான். அலிபாபாவும் 40 திருடர்களும்" என்றார்.
அம்மா என்று அடைமொழியுடன் சீமான் "அம்மாவும் 40 திருடர்களும்" என்று சீமான் தெளிவான அம்பை அதிமுக மேல் தொடுத்தாலும், அதை அநாயசமாக திருப்பி போட்டு திமுக மீது அதே அம்பை போட்டு தாக்கி உள்ளார் அமைச்சர்! இதனால் சீமானுக்கு பதில் சொன்னமாதிரியும் ஆயிற்று.. திமுகவை ஒரு இடி இடித்த மாதிரியும் ஆயிற்று!