அதிமுகவை ஸ்டாலின் சுவாகா போட பார்க்கிறார்.. அது நடக்காது.. அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: அதிமுகவை ஸ்டாலின் சுவாகா போட பார்க்கிறார் என்றும் அது நடக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச் செல்வன் ஆகியோரை தொடர்ந்து புதுக்கோட்டை அமமுக மாவட்ட செயலாளர் பரணி கார்த்திக் இன்று அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
இவர் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதியின் சகோதரர் ஆவார். இந்த நிலையில் தமிழ்நாடு கதர் மற்றும் கிராம சபை சார்பில் சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில் மாற்றுக் கட்சியினருக்கு திமுகவில் பதவிக் கொடுப்பது குழந்தைகளுக்கு ஏதோ மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல் உள்ளது. அமமுகவில் வேண்டுமானால் சிலர் திமுகவுக்கு செல்லலாம். ஆனால் அதிமுகவிலிருந்து யாரும் திமுகவுக்கு செல்லமாட்டார்கள்.
தலைவா... இப்படி திரும்பி ஒரு போஸ்.. அப்படி திரும்பி ஒரு போஸ்.. நடுநடுவே "இது ஓகேவா"!
அதிமுகவை விழுங்க திமுக முயற்சித்து வருகிறது. திமுக திமிங்கலம் என்றால் அதனிடம் மாட்டாத அதிமுக விலாங்கு மீன். திமுக வாயை திறந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது. யாராவது மாட்டுவார்களா என ஸ்டாலின் சுவாகா போட பார்க்கிறார். அது நடக்காது என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.