சூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்
Recommended Video
சென்னை: தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது தவறில்லை என்றும், பிக்பாஸில் இருப்பதால் கமல் 100 நாளைக்கு வெளியே வரமுடியாது என்றும் அதனால் வேலூரில் போட்டியிட்வில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை ராயபுரம் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. அந்த விழாவில் கலந்துகொண்டு மாணவிகளுடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து கூறுவதற்கு ஜனநாயக ரீதியாக உரிமை உள்ளது, அது தவறு இல்லை" என்றார்.
மன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்!
வேலூர் லோக்சபா தேர்தல்
வேலூர் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது குறித்த கேள்விக்கு, பிக் பாஸில் பிசியாக இருப்பதால் 100 நாட்களுக்கு வெளியே வரமுடியாது . அதனால் தான் கமல்ஹாசன் வெளியே வரவில்லை என்றார்.
மொழியை வைத்து வியாபாரம்
முரசொலி தலையங்கம் குறித்து பேசிய ஜெயக்குமார், "திமுக மொழியை வைத்து வியாபாரம் செய்பவர்கள், அண்ணா,எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா வழியில் செயல்படும் நாங்கள் இந்தியை எந்த வகையிலும் நுழைய அனுமதிக்கமாட்டோம்
பத்திரக்கை தர்மம்
நான் திமுகவை பற்றி பேட்டி கொடுப்பதால் பத்திரிக்கை தர்மத்திற்கு மாறாக என்னை முரசொலி தலையங்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்
எங்கள் கொள்கைகளில் நாங்கள் உறுதியாக உள்ளோம், திமுகவை போல் டெல்லிக்கு பாதை பூஜை செய்து நாங்கள் பதவிகளை பெறவில்லை"
என்றார்.
பாஜகவுன் கூட்டணி முறிவா?
தேர்தல் வரை மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்று ஒ.எஸ் மணியன் பேசியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் 'கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்" என்றார்.