சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக மீது தொடரும் விமர்சனம்: துக்ளக் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக-வை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலிஆடு!

    சென்னை: அதிமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுகவின் எதிர்வினையை தேடுவது நல்ல அல்லது என எச்சரித்திருக்கிறார் ஜெயக்குமார்.

    அதிமுக அணிகளை இணைக்கும் முயற்சிகளை பாஜகவுக்காக மேற்கொண்டவர் துக்ளக் குருமூர்த்தி. இதற்காக அமைச்சர்கள் குருமூர்த்தியை நேரில் சந்தித்தும் பேசியிருந்தனர்.

    ஆனால் திடீரென அதிமுகவை மிக கடுமையான வசைசொற்களால் விமர்சித்தார் குருமூர்த்தி. அதிமுகவினரை ஆண்மையற்றவர்கள் என ட்விட்டரில் விமர்சித்தார் அவர்.

    குறையும் வீராணம் ஏரி நீர்மட்டம்.. இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர்? குறையும் வீராணம் ஏரி நீர்மட்டம்.. இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர்?

    சைலண்ட் மோடில் குருமூர்த்தி

    சைலண்ட் மோடில் குருமூர்த்தி

    அப்போது அதிமுக ஒரு சில எச்சரிக்கைகளை விடுத்து அமைதி காத்தது. லோக்சபா தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி அமைந்த நிலையில் குருமூர்த்தியும் அமைதியாகிவிட்டார்.

    அதிமுகவே காரணம்

    அதிமுகவே காரணம்

    ஆனால் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்த நிலையில் மீண்டும் அவர் உக்கிரமானார். அதிமுகவால்தான் பாஜகவுக்கு தோல்வி என பல புள்ளி விவரங்களை வெளியிட்டார்.

    சர்ச்சைக்குரிய கார்ட்டூன்

    சர்ச்சைக்குரிய கார்ட்டூன்

    அவர் வெளியிட்ட புள்ளி விவரங்களே பொய்யானவை என சர்ச்சையானது. பின்னர் மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைக்காதது குறித்து துக்ளக் போட்ட கார்ட்டூன் அதிமுகவினரை கொந்தளிக்க வைத்தது.

    குருமூர்த்திக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

    குருமூர்த்திக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

    பிச்சைக்காரர்களை போல அதிமுகவினரை அதில் சித்தரித்திருந்தது துக்ளக். இதற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மாவில் பதிலடி தரப்பட்டது. ஆனாலும் குருமூர்த்தி அதிமுகவை விடுவதாக இல்லை... தொடர்ந்து விமர்சித்தே வருகிறார். இது தொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள், அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுகவின் எதிர்வினையை குருமூர்த்தி தேடாமல் இருப்பதே நல்லது. ஏற்கனவே அவரது விமர்சனங்களுக்கு கட்சி பத்திரிகை மூலம் பதில் கொடுத்திருக்கிறோம். தொடர்ந்தும் அவர் எங்களை விமர்சிப்பது நல்லது அல்ல என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    Tamilnadu Minister Jayakumar has warned that to Thuglak Editior should stop comments against AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X