ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உட்பட யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தான் வெற்றிபெறும் என்றும் அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு;
பதவி கிடைக்காத கோபம்... அமைச்சர் முன்பு பறந்த சேர்கள்... தெறித்து ஓடிய அதிமுக தொண்டர்கள்
சிதறடிக்க முடியாது
''தமிழகத்தில் அதிமுகவுக்கு உள்ள வாக்கு வங்கியை யாராலும் சிதறடிக்க முடியாது, இது பலமுறை நிரூபணமாகியுள்ளது. தமிழகத்தில் 3 முறை புரட்சித தலைவர் எம்.ஜி.ஆரும், 2 முறை அம்மாவும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் வழியில் மீண்டும் நாங்கள் ஆட்சியை பிடிப்பது உறுதி.''
அரசியல் கட்சி
''தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட யார் அரசியல் கட்சி தொடங்கினாலும் அது அதிமுகவுக்கு பாதிப்பை தராது. அதிமுக மிக வலிமையான வாக்குவங்கி கொண்ட கட்சி. நீட் தேர்வை பொறுத்தவரை திமுகவும், காங்கிரசும் அதை வைத்து அரசியல் செய்து வருகிறது. அரசியல் லாபத்துக்காக நீட் தேர்வை பற்றி அந்த இரண்டு கட்சிகளும் பேசி வருகின்றன. நீட் தேர்வு வேண்டாம் என்பதே அதிமுகவின் கொள்கை.''
தவறான முடிவுகள்
''மன அழுத்தம் காரணமாக யாரும் தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனிடையே நீட் தேர்வு வேண்டாம் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும் தான் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்''.
வேண்டாம் தேர்வு
''நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அதிமுக மிக உறுதியாக உள்ளது. அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டதால் வேறுவழியின்றி நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மற்றபடி நீட் தேர்வு வேண்டாம் என்பதில் கட்சியும், ஆட்சியும் உறுதியாக உள்ளது.''