முதலில் ஆட்சிக்கு வாங்க.. வர முடியாதுனு தெரிந்தே பொய் வாக்குறுதிகள் ஏன்?.. அமைச்சர் மாஃபா!
சென்னை: முக ஸ்டாலின் செயலி பெயரில் மக்கள் குறை கேட்பதாக மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்.
திமுக ஆட்சிக்கு வர முடியாது என்பதை தெரிந்து கொண்டே பொய் வாக்குறுதிகளை அளிக்கிறார் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் பேரூராட்சியில் புதிதாக 3 ஆயிரத்து 500வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இணைப்புகளுக்கான விண்ணப்பங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்
தமிழகம் முழுவதும் மக்கள் ஆதரவு அதிமுக விற்கு உள்ளது தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மக்கள் குறை கேட்பதாக ஸ்டாலின் செயலி மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார். மக்கள் குறைகளை இவர் கேட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள். முதலில் ஆட்சிக்கு வர வேண்டும்.
100 நாட்களில் எப்படி குறைகளை தீர்க்க முடியும். எப்படியும் ஆட்சிக்கு வர போவதில்லை என்பதை அறிந்தே இதுபோன்ற வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. எனவே திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை. மக்கள் அளிக்கும் கோரிக்கைகளை படிக்க கூட மாட்டார்கள். அதனால் பொய் வாக்குறுதிகளை அளித்தும் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்றார்.