அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.. அமைச்சர் அட்டாக்
சிவகாசி: அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக கூட்டணி உருவாகிவிட்டது. இந்த நிலையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
இந்த நிலையில் தேமுதிக, அதிமுக, திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதாவும் திமுக, அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அடக் கொடுமையே.. சின்னக் கவுண்டர் சீனை அப்படியே சுட்டுட்டீங்களேய்யா!
இந்த நிலையில் சிவகாசியில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். 7 பேர் விடுதலை குறித்து நல்ல தீர்ப்பை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
அதிமுக என்ற குதிரையில் யாரும் சவாரி செய்யலாம். அதற்காக குதிரையை தூக்கிச் செல்வேன் என கூற கூடாது என்றார் அமைச்சர்.