கேளுங்க மக்களே, ஸ்டாலின் காங்கிரஸில் சேர போறாராம்.. ராஜேந்திர பாலாஜிக்கு தகவல் வந்துருச்சாம்
முக ஸ்டாலின் காங்கிரசில் சேர போகிறார் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை: "நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லை.. ஸ்டாலின் காங்கிரசில்தான் சேர போகிறார்.. எனக்கு தகவல் கிடைச்சிருக்கு" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இன்னும் 25 வருஷத்தில் ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என்று ஏதோ பாசம் மற்றும் ஆர்வ கோளாறில் துரைமுருகன் சொல்லிவிட்டார்.
ஆனால் அதற்கும் கவுண்ட்டர் தந்து பதில் தர அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான் முடியும். செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, "ஸ்டாலின் காங்கிரஸில் சேரப் போவதாக நான் ஏற்கனவே சொன்னேன். இப்போது அது உண்மையாகிவிட்டது.
ஏனென்றால் "ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ எதுவா இருந்தாலும் நான் காங்கிரஸில் சேர்ந்துவிடுகிறேன், என்னை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துங்கள்" என்று ஸ்டாலினே காங்கிரஸ் தரப்பில் கேட்டு கொண்டதாக எனக்கு தகவல் வந்துவிட்டது.
அதைதான் உங்களுக்கு 2 நாளைக்கு முன்னாடியே சொன்னேன். நான் விசாரிச்ச வரைக்கும் அந்த தகவல் உண்மைன்னுதான் சொல்றாங்க.
ஏதாவது பேசி.. வாயை விட்டு சர்ச்சையில் சிக்கி.. இதெல்லாம் துரைமுருகனுக்கு தேவையா?
அதுக்கேத்தபடி, துரைமுருகனும், ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என்று சொல்லிவிட்டார். அதனால் ஸ்டாலின் ஜனாதிபதியா மட்டுமில்லை.. அமெரிக்க அதிபராகக் கூட வரட்டும், அதைப்பற்றி கொஞ்சம்கூட கவலை இல்லை. அவர் தமிழ்நாட்டை விட்டுப் போனால் சரிதான்" என்றார்.