கருணாநிதிக்கு அமெரிக்காவில் சிகிச்சை கொடுத்திருந்தால்.. அழகிரிதான் திமுகவின் தலைவர்.. அமைச்சர்
சென்னை: கருணாநிதிக்கு அமெரிக்காவில் பேச்சு பயிற்சி கொடுத்திருந்தால் முக ஸ்டாலினுக்கு பதில் முக அழகிரியை திமுக தலைவராக்கியிருப்பார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி ஆவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மே 23-ஆம் தேதியுடன் ஆட்சி கவிழும் என திமுகவினரை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்.
ஈபிஎஸ் ஆட்சியை கவிழ்க்க எதிரிகளும் துரோகிகளும் சேர்ந்து கொண்டு சதி செய்கின்றனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் மறைமுகமாக 40 திமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கொலையாளி அல்ல.. அவர் நிரபராதி.. விடுவித்தது போலீஸ்!
முக அழகிரி
கருணாநிதிக்கு அமெரிக்காவில் பேச்சு பயிற்சி கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுத்திருந்தால் ஸ்டாலினை நீக்கிவிட்டு திமுக தலைவராக முக அழகிரியை தலைவராக்கியிருப்பார்.
4ஆவது அணி
3ஆவது அணி உருவானால் என்ன, 4-ஆவது அணி உருவானால் என்ன. மோடிதான் பிரதமர்.குழப்பத்தில் உருவானது அமமுக கட்சி. அக்கட்சியினரே அதிமுக கரை வேட்டிகளை வாங்கி வருகின்றனர் என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
கருணாநிதிக்கு
கருணாநிதிக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல ஆரம்பித்தார். இதையடுத்து அமைச்சர்களும் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை குறித்து பேச ஆரம்பித்துவிட்டனர்.
சந்தேகம்
தேர்தல் முடிந்தவுடன் கருணாநிதி மரணம் குறித்த விசாரணை நடத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மதுரைக்காக அழகிரியை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியாக அழகிரிக்கு ஆதரவாக அதிமுக அமைச்சர்கள் பேசுவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.