தெய்வபக்தி உள்ளவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி... திமுக மீது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சாடல்
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெய்வபக்தி மிக்கவர் என்றும், கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அயராது பாடுபடுகிறார் எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக அரசை பற்றி அவதூறு பரப்புவதும், குறை கூறுவதுமே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வேலையாக உள்ளது என அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனமே பாராட்டக் கூடிய வகையில் உள்ளதாக கூறியிருக்கிறார்.
மகிழ்ச்சி தகவல்: கொரோனாவை குணப்படுத்தும் 'கோவிஃபார்' மருந்து இந்தியாவில் அறிமுகம்! ஒரு டோஸ் ரூ.6000
அமைச்சர் விமர்சனம்
தினம்தோறும் ஆள்வைத்து அறிக்கை வெளியிட்டு அரசியலில் நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள ஸ்டாலின் படாதபாடு படுவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார். கொரோனா நோயை வைத்து மு.க.ஸ்டாலின் மலிவான அரசியல் செய்வதாகவும், தன் இருப்பை காட்டிக்கொள்வதற்காக அவர் இவ்வாறு நடந்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். அறிக்கைகளால் ஸ்டாலின் மக்களை குழப்புவதை நிறுத்த வேண்டும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
காழ்ப்புணர்ச்சி
கொரோனா காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் அனைத்து அறிக்கைகளும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக இருப்பதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தமிழகத்தில் உருவானது அல்ல என்றும் இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் எனவும் கூறியிருக்கிறார். அரசை குறை கூறுவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
தவறில்லை
கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் தான், கொரோனா எப்போது ஒழியும் என்ற கேள்விக்கு இறைவனுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில் தெரிவித்ததாகவும், அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், முதலமைச்சர் தெய்வபக்தி மிக்கவர் என்றும்,கொரோனாவில் இருந்து மக்களை காப்பற்ற அயராது பாடுபடுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
திமுக எச்சரிக்கை
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சட்டத்தின் முன் பதில் சொல்லவேண்டிய காலம் வெகு தொலைவில் என திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கடந்த வாரம் காட்டமான அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அதில் தான் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.