அப்போலோ ஆஸ்பத்திரியில் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் அனுமதி
அப்போலோ மருத்துவமனையில் செல்லூர் ராஜு அனுமதிக்கப்பட்டுள்ளார்
Recommended Video
சென்னை: அமைச்சர் செல்லூர் ராஜு சுகவீனம் காரணமாக அப்போலோ ஆஸ்பத்திரியில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு சில நாட்களாகவே உடம்பு சரியில்லை.. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதற்கான சிகிச்சை எடுத்து கொண்டும், காய்ச்சல் இன்னும் குணமாகவில்லை என்று தெரிகிறது. அதனால், இன்று காலை சென்னை தேனாம்பேட்டை அப்போலோ ஆஸ்பத்திரியில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு காய்ச்சலுக்கான தீவிர சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.
இந்த 6 மாநகராட்சி யாருக்கு.. கூட்டணிக்கு விட்டுத்தருமா அதிமுக.. பரபரக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்
ஆனால் இதை பற்றி அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதேபோல மருத்துவமனை தரப்பிலும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் காய்ச்சல் குணமாகி விரைவில் அமைச்சர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.