ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம்.. ரூ 33-க்கு விற்பனை.. செல்லூர் ராஜூ அறிவிப்பு
Recommended Video
சென்னை: ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ 33-க்கு விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வெங்காயம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
இதனால் வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்க்கெட்டுகளுக்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது.
ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்போது வெங்காயத்தின் விலை அதிகரிப்பால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கோயிலில் புத்த பிக்கு உடலை தகனம் செய்வதா? சீமான் கண்டனம்
இந்த நிலையில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெங்காயத்தின் விலை குறையும் என தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் விலை ஏறிக் கொண்டுதான் இருக்கிறது. இதையடுத்து மக்களின் சிரமத்தை குறைக்க தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33-க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மேலும் 200 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.