சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகும்.. அமைச்சர் செங்கோட்டையன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.

Minister Sengottaiyan says about school opening

அப்போது ஓரிரு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆங்காங்கே ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோரை நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அது போல் பள்ளிகள் திறக்காவிட்டாலும் ஆன்லைன் வகுப்புகளை காரணம் காட்டி கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக வழக்கு ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் முடிவாகும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

கர்நாடகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய மாணவனுக்கு கொரோனா.. கலக்கத்தில் மாணவர்கள் கர்நாடகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய மாணவனுக்கு கொரோனா.. கலக்கத்தில் மாணவர்கள்

ஆனால் தற்போது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகும்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என திட்டமிட்டிருந்த நிலையில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. முதல்வரிடம் ஆலோசனை செய்த பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவு குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

English summary
Minister Sengottaiyan says that Opening of Schools in Tamilnadu will take long time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X