ஜெராக்ஸ் மிஷின் கூட வேணாங்றாங்கய்யா.. இப்படியா பயப்படுறது... திமுகவை கிண்டலடிக்கும் அமைச்சர்!
மதுரை: தோல்வி பயத்தால் ஜெராக்ஸ் மிஷின் கொண்டுபோக கூட திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது என அமைச்சர் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இதற்கான பணிகளில் தேர்தல் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.. இந்நிலையில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மதுரை மருத்துவக்கல்லூரி மையத்தில் நாளை எண்ணப்படுகிறது.
மாயாவதியை கொஞ்சம் பார்க்கணும்.. வரிசையில் காத்திருக்கும் உயர் அதிகாரிகள்.. அதிரடி திருப்பம்!
எலெக்ட்ரானிக் பொருள்கள்
இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு ஜெராக்ஸ் மிஷின், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல எலெக்ட்ரானிக் பொருள்கள் நேற்று கொண்டு செல்லப்பட்டது.
திமுக எதிர்ப்பு
எந்த ஆவணமும் இல்லாமல் கொண்டு செல்லப்படுவதாக தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டினர். இதனால் வாக்கு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
தோல்வி பயம்
இந்நிலையில் அமைச்சர் உதயக்குமார் மதுரையில் வாக்கு எண்ணிக்கை மைய முகவர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தோல்வி பயத்தால் திமுக ஜெராக்ஸ் மிஷின்களை கூட வாக்கு மையத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என கூறுகிறது என்று கிண்டலடித்தார்.
தோல்வி பயம்
இந்நிலையில் அமைச்சர் உதயக்குமார் மதுரையில் வாக்கு எண்ணிக்கை மைய முகவர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தோல்வி பயத்தால் திமுக ஜெராக்ஸ் மிஷின்களை கூட வாக்கு மையத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என கூறுகிறது என்று கிண்டலடித்தார்.
மனதை அறிய முடியாது
திமுக தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் உள்ளது. கருத்துக்கணிப்பு எல்லாம் உண்மையாகாது. மக்கள் மனதை யாராலும் அறிய முடியாது. இவ்வாறு அமைச்சர் உதயக்குமார் பேசினார்.