சர்ச்சையில் அழகி ஷீபா.. ஒரு டாக்டர் இப்படி செய்யலாமா.. அதிர்ந்த அதிகாரிகள்.. என்ன நடந்தது?
மாஸ்க் அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை அழகியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது
சென்னை: டாக்டரும் சென்னை அழகியுமான ஷீபா மாஸ்க் போடாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாராம்.. இது சம்பந்தமான சர்ச்சை தற்போது வெடித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்றவர் ஷீபா.. இவர் ஒரு டாக்டர்.. சமூக செயற்பாட்டாளரும்கூட.. பல்வேறு நலத்திட்ட உதவிகளை இவர் செய்து வருகிறார்.
தற்போது கொரோனா காலம் என்பதால், இலவச மாஸ்க், சானிடைசர்கள் தருவது என பலவற்றையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், மயிலாப்பூரில் அமைந்துள்ள ஒரு டயாலிசிஸ் சென்டரில் 2 நாளைக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடினார்.. இதற்கான விழாவும் அந்த சென்டரிலேயே நடந்துள்ளது.. அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ரியாஸ்கான் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் டாக்டர் ஷீபா மாஸ்க் அணியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. மாஸ்க் போடாமலேயே அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகளை சந்தித்துள்ளார்.. அவர்களுக்கு பழங்களை தன் கையாலேயே தந்துள்ளார். இதுதான் விவகாரமாக வெடித்துள்ளது.
அதுபோலவே, அப்துல்கலாம் நினைவு நாளுக்கு ஒரு அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.. அங்கும் அவர் மாஸ்க் இல்லாமல்தான் சென்றாராம்... இப்படி ஷீபா பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் வெளியானதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை எல்லாம் நடத்த அதிகாரிகளின் உத்தரவு கிடைத்ததா? யாரிடம் ஷீபா அனுமதி பெற்றார் என்று பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
தனியாக இருந்த பெரியம்மா.. தலையை வெட்டி சாய்த்த மகன்.. கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்!
ஆனால், தன் மீதான இந்த குற்றச்சாட்டை டாக்டர் ஷீபா மறுத்துள்ளார்.. தான் மாஸ்க் அணியாவிட்டாலும், விழாவில் இருந்தவர்கள் அனைவருமே மாஸ்க் அணிந்திருந்தனர் என்று உறுதியாக கூறியுள்ளார். இருந்தாலும், ஒரு டாக்டராக இருந்து கொண்டு, சமூக ஆர்வலாக இருந்து கொண்டு, மாஸ்க் இல்லாமல் போயிருக்க கூடாதுதானே என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.