"மிஸ்டர் எக்ஸ்" வருவார்.. வெறும் 3 நிமிஷம்தான்.. அண்ணாமலை மீட்டிங்கில்.. வார்னிங் கொடுத்த அமித் ஷா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலையை எந்த நம்பிக்கையில் தமிழ்நாடு பாஜக தலைவர் ஆக்கினார்கள் என்று தெரியவில்லை. அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை. அவர் போலீஸ் அதிகாரி. அவர் என்ன நிரூபித்தார், அவர் கட்சிக்காக பல ஆண்டுகளாக பணியாற்றிய நபர்களை மதிக்கவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக அதிமுக இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.இந்த மோதலின் உச்ச கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று கூறி உள்ளாராம் அண்ணாமலை.

இந்த நிலையில்தான் சமீபத்தில் பேட்டி அளித்த அமித் ஷா, தமிழ்நாட்டில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவும். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறிய நிலையில்தான் அமித் ஷா இப்படி பேசி இருக்கிறார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு - டெல்லிக்கு இடையிலான உறவு குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

 பாஜக பலம்

பாஜக பலம்

ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் வேறு கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்த பலர் மீண்டும் பழைய கட்சிக்கே திரும்பி சென்றுள்ளனர். கு. க செல்வம் போன்றவர்கள் மீண்டும் திமுகவிற்கு சென்றுவிட்டனர். நிர்மல் குமார் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு சென்றுவிட்டார். அண்ணாமலைதான் பிரச்சனை என்றே வைத்துக்கொள்வோம். அண்ணாமலையை இவர்களுக்கு பிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அண்ணாமலை இல்லை என்றால் மிஸ்டர் எக்ஸ் ஒருவர் தலைவராக வரப்போகிறார். அது வரை காத்து இருக்கலாமே. மத்தியில் ஆளும் பாஜகவில் ஏன் இவர்களால் உறுப்பினர்களாக நீடிக்க முடியவில்லை.

பேட்டி

பேட்டி

அண்ணாமலையை மாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் ஏன் இவர்களால் கட்சியில் இருக்க முடியவில்லை. பாஜகவில் அப்படி என்றால் எதோ பிரச்சனை என்றுதானே அர்த்தம். இதுதான் பாஜக வளர்ந்த விதமா? இதுதான் பாஜக வளர்ச்சியை காட்டுகிறது. அண்ணாமலை தன்னை கொள்கை வாதி என்கிறார். தன்னை வலிமையானவர் என்கிறார். வாய் சொல் வீரர் என்கிறார். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்கிறார். அப்படி என்றால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அண்ணாமலை சொன்னது போல ராஜினாமா செய்வாரா? அவர் ஒரு வார்த்தையில் இதற்கு உறுதியாக பதில் சொல்ல முடியுமா?

நம்பிக்கை

நம்பிக்கை

அண்ணாமலையை எந்த நம்பிக்கையில் தமிழ்நாடு பாஜக தலைவர் ஆக்கினார்கள் என்று தெரியவில்லை. அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை. அவர் போலீஸ் அதிகாரி. அவர் என்ன நிரூபித்தார். இதனால்தான் பொன் ராதாகிருஷ்ணன் கூட உள்ளரங்க கூட்டத்தில் கோபமாக பேசினார். இந்த கட்சி தனது தொண்டர்களை, புதியவர்களை, கூட்டணி கட்சிகளை மதிக்கவில்லை. கட்சிக்காக பல ஆண்டுகளாக பணியாற்றிய நபர்களை மதிக்கவில்லை என்று பொன்னார் சொல்கிறார். பொன் ராதாகிருஷ்ணனே இப்படி சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

அண்ணாமலை ஏன் இப்படி நடந்து கொள்கிறார். ஏன் அவர் மாற்றி மாற்றி பேசுகிறார். அவர் இப்படி வாய் புளித்ததோ.. மாங்காய் புளித்ததோ என்று பேசுகிறார், என்று பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து கேள்வி எழுப்பிய நமது செய்தியாளர்.. டெல்லியில் இருந்து திரும்பிய அண்ணாமலை திடீரென எடப்பாடியை வாழ்த்துகிறார், கூட்டணி பற்றி டெல்லிதான் முடிவு எடுக்கும் என்றெல்லாம் கூறுகிறாரே. அப்படி என்றால் அண்ணாமலையை டெல்லி வார்னிங் கொடுத்து அனுப்பி உள்ளது என்று வைத்துக்கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

குபேந்திரன்

குபேந்திரன்

இதற்கு பதில் அளித்த குபேந்திரன், அமித் ஷாவை அண்ணாமலை வெறும் 3 நிமிடம்தான் சந்தித்தார் என்பதே எனக்கு கிடைத்த தகவல். அப்படி என்றால் அந்த நிமிடத்தில் என்ன நடந்து இருக்கும் என்று நீங்கள் யூகித்துக்கொள்ளுங்கள். இது உண்மை. பொய் கிடையாது. அப்படி என்றால் அண்ணாமலை எதுவும் பெரிதாக பேசவில்லை. அண்ணாமலை எதுவும் சொல்லவில்லை. அமித் ஷா இதை எல்லாம் கேட்டுக்கொள்ளவில்லை. அமித் ஷா நேற்று.. பாஜக வலிமையாக இல்லை, அதிமுகவுடன்தான் கூட்டணி என்று கூறினார். இதை செய்தியாளர்களிடம் டீசண்ட்டாக அமித் ஷா சொன்னார்.

அமித் ஷா சொன்னாரா?

அமித் ஷா சொன்னாரா?

இதையே கொஞ்சம் காட்டமாக அண்ணாமலையிடம் அமித் ஷா சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன். அதிமுகவுடன்தான் கூட்டணி என்று அமித் ஷா சொல்லிவிட்டார். அப்படி இருக்க அண்ணாமலை என்ன செய்வார்? அண்ணாமலை எங்கே போவார்? அண்ணாமலை என்னும் கிளி என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணாமலையை வைத்துக்கொண்டு கூட்டணியில் இருக்க முடியாது? அமர் பிரசாத் ரெட்டி நிர்வாகியாக இருக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க முடியாது என்று எடப்பாடி சொன்னால் என்ன செய்வார்கள்? அமர் பிரசாத் ரெட்டி எப்படி எடப்பாடியை அவமதிக்கலாம். இப்படி இருக்கும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று எடப்பாடி கூறினால் அண்ணாமலை என்ன செய்வார், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+