நிர்பயா நிதி ரூ 190 கோடியில் வெறும் ரூ 6 கோடியை மட்டும் அதிமுக செலவு செய்தது ஏன்?- ஸ்டாலின் கேள்வி
சென்னை: நிர்பயா நிதி ரூ 190 கோடியில் வெறும் ரூ 6 கோடியை மட்டுமே அதிமுக செலவு செய்தது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில் கோவை மற்றும் துடியலூரில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் ஆண்டி சிறுவள்ளூரில் இளம்பெண்ணின் மர்ம மரணமும் தாய்மார்களைப் பெரும் பீதியடைய வைத்துள்ளது.
ரூ.190 கோடி நிர்பயா நிதியில் வெறும் 6 கோடியை மட்டும் அதிமுக அரசு செலவு செய்தது ஏன்? இவற்றை சுட்டிக்காட்டினால், "ஸ்டாலின் அரசியல் செய்கிறார்" என்று விதண்டாவாதமாக முதலமைச்சர் கூறுவார்.
இந்திய குடியுரிமை வழங்கும் சட்ட திருத்த மசோதா- பூட்டியாவின் சிக்கிம் கட்சி கடும் எதிர்ப்பு
பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக அதிமுக அரசின் தவறுகளை - ஊழல்களை- மக்கள் விரோதச் செயல்களை நான் சுட்டிக் காட்டிக் கொண்டுதான் இருப்பேன்! அவர்கள் பதில் சொல்லத்தான் வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார்.