பெண்ணுரிமை பேசும் திமுகவில் இருந்து கொண்டு இப்படி பேசக்கூடாது.. ராதா ரவிக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
Recommended Video
சென்னை: நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராதாரவிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'கொலையுதிர் காலம்' என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது நடிகை நயன்தாரா தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசிய சில கருத்துக்களை கூறினார்.
நயன்தாரா பேயாக நடிக்கிறார், சாமி வேடத்தில் நடிக்கிறார். இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி வேடத்தில் நடிக்க முடிகிறது என்றும் தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், ராதாரவி திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் திமுக தலைவர், ஸ்டாலினும் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். pic.twitter.com/vEM2Eri2zN
— M.K.Stalin (@mkstalin) March 25, 2019
பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.