’ஆள்மாறாட்ட’ உதித்சூரியாக்களுக்கு எம்பிபிஎஸ் சீட் வழங்கும் நீட் கொடூரம் தொடரலாமா? ஸ்டாலின்
சென்னை: 'ஆள்மாறாட்ட' உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் NEET கொடூரம் தொடர அனுமதிக்கலாமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு மூலம் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் உதித் சூரியா என்ற மாணவர் படித்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது விசாரணையில் உதித் சூர்யா ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த நீட் பயிற்சி தேர்வு மூலம் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து நீட் ஆள் மாறாட்டத்தில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் மாணவர் விவரங்கள் சரிபார்க்கப்பட இருக்கின்றன.
+2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?
— M.K.Stalin (@mkstalin) September 19, 2019
மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்! https://t.co/hcrHWZvPMu
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், +2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?
நாளையுடன் விக்ரம் லேண்டர் ஆயுள் முடிவு.. இஸ்ரோ அளித்த புதிய விளக்கம்
மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.