காஷ்மீர் தாக்குதல் கோழைத்தனமானது.. மு.க.ஸ்டாலின் கண்டனம்
காஷ்மீர் தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ் மீது சக்தி வாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதிகள், மோதி வெடிக்க செய்ததில் 44 வீரர்கள் பலியானார்கள்.
இந்த தற்கொலை தாக்குதலுக்கு இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த தற்கொலை தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
I’m deeply grieved and firmly condemn the cowardly attack on #CRPF soldiers in Awantipora. DMK while expressing deep condolences to all the bereaved families stands firmly with the security personnel in the service of the nation.
— M.K.Stalin (@mkstalin) February 14, 2019
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் கண்டனத்திற்குரியது. சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது.
உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.