கூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு
Recommended Video
சென்னை: வீட்டின் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், மத்திய அரசின் தலையீடு காரணமாவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது , ப சிதம்பரம் கைதுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில் சிபிஐ அதிகாரிகள் வீட்டின் சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம் ஆகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது
சுமார் 20 முறைக்கு மேல் சிபிஐ அதிகாரிகள் கூப்பிட்டபோதெல்லாம் ப சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்கமளித்து இருக்கிறார். ப சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர். அவரது விமர்சனத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" இவ்வாறு கூறினார்