பாசிஸ்ட் பாய்ச்சல், சேடிஸ்ட் சேட்டைக்கெல்லாம் திமுக பயந்து ஓடாது.. ஸ்டாலின் பொளேர்!
சென்னை: பாசிஸ்ட் பாய்ச்சல் மற்றும் சேடிஸ்ட் சேட்டைக்கெல்லாம் திமுக ஒரு்காலும் ஓய்ந்து ஓடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமாழ வரித் துறையினர் ரெய்டு நடந்தது. அத்துடன் அவரது மகன் கதிர் ஆனந்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் பாசிஸ்ட் பாய்ச்சல் மற்றும் சேடிஸ்ட் சேட்டைக்கெல்லாம் திமுக ஒரு்காலும் ஓய்ந்து ஓடாது. திமுக பனழங்காட்டு கரி எந்த சலசலப்பும் அஞ்சி ஓடாது.
ரெய்டு பயமுறுத்தலுக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என மோடிக்கும் பழனிச்சாமிக்கும் கூறிக் கொள்கிறேன். சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் அமைப்பு ஆகியவற்றை சட்டை பையில் போட்டுக் கொண்டு மோடி சாகசம் செய்கிறார்.
காபந்து பிரமதரின் அதிகாரத்துக்கு சுதந்திரமான அமைப்புகள் கைகட்டி நிற்பது கேவல நிலைமை. பணவிநியோகத்தை தடுக்க நினைத்தால் பிரதமரின் தலைமையில் சுதந்திர அமைப்புகள் இயங்கக் கூடாது.
நான் குளிக்கப்போய்ட்டேன்.. துரைமுருகன் செம கலாய்.. சோஷியல் மீடியாவில் இப்போ இதுதான் ட்ரெண்ட்
உச்சநீதிமன்ற நீதிபதியின் நேரடி பார்வையில் சுதந்திர அமைப்புகள் செயல்பட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமு கூட்டணி படுதோல்வியடையும் என சர்வே முடிவுகளால் மோடிக்கு ஏமாற்றம், கோபம் அடைந்து அவராகவே தலையிட்டு இந்த ரெய்டை நிகழ்த்த உத்தரவிட்டுள்ளார் என ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.