புதுச்சேரி ஆட்சி கவிழ்ப்பு- ஜனநாயகப் படுகொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்
சென்னை: புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டுள்ளது ஜனநாயகப் படுகொலை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனையடுத்து நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது.
இதனை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைமறைவு பேரங்கள் - ஜனநாயகப் படுகொலையை இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது - அதிகார துஷ்பிரயோகம் இது!
ஜனநாயகம் காப்பதில் முதலமைச்சர் நாராயணசாமியின் துணிச்சலை வாழ்த்துகிறேன். திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்! என கூறியுள்ளார்.
ஸ்டாலின் அறிக்கை விவரம்:
Comments
puducherry assembly election 2021 puducherry assembly trust vote bjp dmk mk stalin புதுச்சேரி சட்டசபை தேர்தல் 2021 புதுச்சேரி சட்டசபை politics
English summary
DMK President MK Stalin has condemned to topple Puducherry Cong. Govt.
Story first published: Monday, February 22, 2021, 14:18 [IST]