கோவையில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது கண்டனத்திற்குரியது: மு.க. ஸ்டாலின்
சென்னை: கோவையில் 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை டவுன்ஹால் ரோடு மாகாளியம்மன் கோவில் பகுதியில் கோவில் முன்பாக டயர்கள் வீசப்பட்டன; திரிசூலம் வளைக்கப்பட்டது என செய்திகள் வெளியாகின. இந்த காலித்தனத்தை செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இதேபோல் நல்லாம்பாளையத்தில் கோவில் பொருட்கள் எரிக்கப்பட்டன. இப்படி கோவையில் மொத்தம் 3 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது.
எனக்கு 35 உனக்கு 20 வளர்ப்பு மகனை திருமணம் செய்த ரஷ்ய பெண் - வித்தியாச காதல் கதை
பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும்.
Recommended Video
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.