கூட்டணி விவகாரம்... திமுக தொகுதி பங்கீட்டு குழு மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை
சென்னை: துரைமுருகன் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இருகட்சிகளும் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் தீவிரமாக இறங்கிவிட்டன.
அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த குழுவினர் தேமுதிக, மற்றும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் திமுக சார்பில் துரைமுருகன் தலைமையில், எ.வ.வேலு, பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோர் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட தோழமை கட்சிகளுடன் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவைச் சேர்ந்தவர்கள், மு.க.ஸ்டாலினுடன் சென்னை அண்ணாஅறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். திமுக அணியில் உள்ள கட்சிகளை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பது பற்றி ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.