துடிப்பாக அரசியலில் களமிறங்கி உள்ள பிரியங்காவுக்கு... ஸ்டாலின் வாழ்த்து
பிரியங்கா காந்திக்கு மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: "துடிப்பாக அரசியலில் களமிறங்கி உள்ள பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள்" என்று உ.பி., கிழக்கு மண்டல காங்கிரஸ் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநில (கிழக்கு) பொதுச்செயலாளராக பிரியங்காவை நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி நியமித்தார். இந்த பணியை பிரியங்கா வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து மேற்கொள்ள போகிறார்.
புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளதால், பிரியங்காவுக்கு நேற்றுமுதல் அகில இந்திய தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். இதில் முதல் ஆளாக தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டவர் ராபர்ட் வதேராதான்.
இந்நிலையில், ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் என்று இந்திய அரசியல் கட்சி தலைவர்களிலேயே முந்திக் கொண்டு சொன்ன ஸ்டாலின், பிரியங்காவுக்கு தனது மனமார வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
I wholeheartedly congratulate #PriyankaGandhi on her joining active politics and wish her the best in this new role.
— M.K.Stalin (@mkstalin) January 24, 2019
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் சொல்லி இருப்பதாவது: "துடிப்பாக அரசியலில் களமிறங்கி உள்ள பிரியங்காவுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். தனது புதிய பொறுப்பில் அவர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்" என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.