திமுக மா.செக்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் ஸ்டாலின் ஆலோசனை.. கண்டன தீர்மானங்களுடன் முடிந்தது
சென்னை: திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களுடன் காணொலி காட்சி மூலம் ஸ்டாலினின் ஆலோசனை கூட்டம் முடிந்தது.
இதுகுறித்து ஸ்டாலின் நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மீது முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்களின் தூண்டுதலின் பேரில் போடும் பொய் வழக்குகள் குறித்தும், சட்டவிரோத கைது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான ஆர்.எஸ்.பாரதிக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. காணொலி காட்சி மூலம் ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இதில் கடும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாதிக்கப்படும் தொண்டர்களை பாதுகாக்க மாவட்ட வாரியாக வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும்.
திமுகவினர் மீதான கைது நடவடிக்கைக்கு கண்டனம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.