சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முரசொலி... இதுவே இறுதி பதில்... ஆதாரங்களை ஆணையத்திடம் வழங்குவேன் - ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    விஸ்வரூபம் எடுக்கும் முரசொலி விவகாரம்

    சென்னை: முரசொலி நிலம் குறித்த ஆதாரங்களை உரிய நேரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் வழங்கி உண்மையை நிரூபிப்பேன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், முரசொலி நிலம் தொடர்பான புகார்களுக்கு இதுவே இறுதி பதில் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    கமல் நல்லவர் தான்... நம்மவர்தான்.. ஆனால்... விவரிக்கும் ம.நீ.ம. வேட்பாளர்கள்!கமல் நல்லவர் தான்... நம்மவர்தான்.. ஆனால்... விவரிக்கும் ம.நீ.ம. வேட்பாளர்கள்!

    அவதூறு

    அவதூறு

    ஜனநாயகத்தில் தோல்வியடைந்தோர், மக்கள் ஏன் தங்களைப் புறக்கணித்தார்கள் என்றாய்ந்து, மனம் திருந்தி, மக்கள் பணியாற்றி, ஆதரவைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆனால், வெற்றி பெற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும், அடிப்படையில்லா பழிச்சொல்லுக்கு ஆளாக்கி, அவதூறுகளைப் பரப்புவதே அவர்தம் ஜனநாயகக் கடமை என்று நினைக்கின்றனர்.

     அரசு அதிகாரம்

    அரசு அதிகாரம்

    அம்முறையிலேதான், அரசு அதிகாரங்களை முறைகேடாகச் செலுத்தி, மக்களிடையே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திடவேண்டும் என்று ஆவலாய்ப் பறக்கின்றனர்.அவ்வழியில் முத்தமிழ் அறிஞர், கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளையாம் முரசொலியின் மீது தொடர்ச்சியான அவதூறு.

    ராமதாசுக்கு கேள்வி

    ராமதாசுக்கு கேள்வி

    மருத்துவர் இராமதாசு அவர்கள், 17/10/2019 அன்று, ஒர் அறிக்கையினை வெளியிட்டார்கள். முரசொலி நிலம் பஞ்சமி நிலமென்றும் குறிப்பிட்டார்கள். அன்றே, அது பச்சைப் பொய்யென்று, பட்டா நகலின் ஆதாரத்துடன் மறுப்பு அறிக்கை தந்தோம். மீண்டும் 19/10/2019-ல் மூலப் பத்திரத்தினைக் காட்டிடவில்லையென்று ஒர் அறிக்கை தந்தார். பொதுவெளியிலும் சரி, நீதிமன்றத்திலும்; குற்றம் சுமத்தியவர்தானே நிரூபித்திட வேண்டும்.

    உரிய நேரத்தில்

    உரிய நேரத்தில்

    முரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம்.

    அரசியல் லாபம்

    அரசியல் லாபம்

    முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது, தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒவ்வொரு கழகத் தொண்டனின் உயிர் மூச்சுமாகும். அதன் மீது, கேவலம், தற்காலிகமான அரசியல் லாபத்திற்காக, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல; கழகத்தின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.

    அபாண்டப் பழி

    அபாண்டப் பழி

    முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன். இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன்.

    English summary
    mk stalin says,i will provide the murasoli land evidence to the Commission
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X