தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ அதிகாரம் தேவை.. மு.க.ஸ்டாலின்
சென்னை: தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ அதிகாரம் வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஸ்டாலின் பேசுகையில் கூட்டாட்சி அமைப்பு முறையை திமுக வலியுறுத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்ட முகப்பில் உள்ள அடிப்படை பண்புகளை சிதைப்பதை ஏற்காது.
மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு தன் கையில் வைத்துள்ளது. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை இந்தியாவில் பின்பற்ற வேண்டும். தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ அதிகாரம் வேண்டும் என்றார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. 7 தமிழர்களை விடுவிக்க திமுக பொதுக் குழுவில் தீர்மானம்
திமுகவுக்கு தேர்தல் நிதியாக ரூ 50.96 கோடி வரவு வைக்கப்பட்டிருப்பதாக அறிக்கையில் தகவல் கூறப்படுகிறது. பொதுத் தேர்தல் விருப்பமனு மூலம் ரூ 3.44 கோடி வரவு வைக்கப்பட்டது.