சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதைவிட வேறென்ன வெட்கக்கேடு இருக்க முடியும்? மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் மீதான சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை அப்பீல் செய்யும் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டுகளில் கூறியுள்ளதாவது:

MK Stalin strongly condemned AIADMK leader Ponnaiyan statement

முதல்வர் மீதான சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை அப்பீல் செய்யும் - அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன்.

இதைவிட வேறென்ன வெட்கக்கேடு இருக்க முடியும்? லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அ.தி.மு.க என்ற கட்சியின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதற்கு இதுவே உதாரணம்!

முதல்வர் தன் மீதான ஊழல் புகாருக்கு பதில் சொல்ல தைரியம் இல்லாமல் கட்சியின் அமைப்புச் செயலாளரை வைத்து பதிலளிப்பதன் மூலம், திமுக அளித்துள்ள புகார்கள் அனைத்தும் உண்மை என்பது நிரூபணமாகிறது.

மேலும், இவர்களின் அராஜகத்தால் மாநிலத்தின் தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரமே பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை என்பது அரசுத்துறை அமைப்பு. ஆனால், அதன் எதிர்கால முடிவுகள் குறித்து, அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கருத்து கூறியிருந்த நிலையில், ஸ்டாலின் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.

English summary
The AIADMK organizing secretary General Ponnaiyan said that the corruption and preventive department will appeal against the CBI inquiry into the CM. DMK chief MK Stalin strongly condemned this
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X