ரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்
சென்னை: ரபேல் விமானங்களை வாங்கு விவகாரத்தில் பிரதமர் மோடியின் முகத்திரை சுக்குநூறாகிவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
ரபேல் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகள் அனைவரையும் கதி கலங்க வைத்தன.
இந்நிலையில் ரபேல் தொடர்பான கோப்புகள் அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் படுக்கை அறையில் இருப்பதாக கோவா நிர்வாகி ஒருவர் பேசும் ஆடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி எடுத்த முடிவால் ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41% அதிகமாகி விட்டது' என #RafaleScam குறித்து @the_hindu இல் @nramind எழுதியுள்ள புலனாய்வுக் கட்டுரை பா.ஜ.க & பிரதமர் மோடியின் முகத்திரையை சுக்கு நூறாக்கி விட்டது!
— M.K.Stalin (@mkstalin) January 20, 2019
இனியும் பொய் பிரசாரம் தேவைதானா? pic.twitter.com/HanGGR2jk6
இந் நிலையில் இதுகுறித்து இந்து பத்திரிகையில் ராம் எழுதிய கட்டுரையை சுட்டிக் காட்டி ஸ்டாலின் சில கருத்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் '36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி எடுத்த முடிவால் ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41% அதிகமாகி விட்டது' என ரபேல் முறைகேடு குறித்து இந்து பத்திரிகையில் என் ராம் எழுதியுள்ள புலனாய்வுக் கட்டுரை பா.ஜ.க & பிரதமர் மோடியின் முகத்திரையை சுக்கு நூறாக்கி விட்டது!
இனியும் பொய் பிரசாரம் தேவைதானா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.