இந்து பயங்கரவாதம் உருவாகும் என பேச்சு... ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் இந்து பயங்கரவாதம் உருவாகும் என்று பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த ராஜேந்திர பாலாஜி, இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நெஞ்சில் நஞ்சும்,வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
நெஞ்சில் நஞ்சும்,வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
— M.K.Stalin (@mkstalin) February 2, 2020
சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியான நடவடிக்கை தேவை! https://t.co/656WPLQM8z
சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியான நடவடிக்கை தேவை!
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி திட்டம், நதிகள் இணைப்பு, வேலைவாய்ப்பு திட்டங்கள் இல்லையே.. விஜயகாந்த்