திருவாடாணை, பூம்புகார் எம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை: திருவாடாணை தொகுதி மற்றும் பூம்புகார் தொகுதியின் எம்எல்ஏக்கள் கருணாஸ் மற்றும் பவுன்ராஜுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் 2.70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தினமும் 5000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் டெஸ்டிங்கில் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள், மத்திய பிரதேச முதல்வர், கர்நாடக முதல்வர், முன்னாள் முதல்வர், தமிழக ஆளுநர், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவாடாணை தொகுதி எம்எல்ஏ கருணாஸுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவரது உதவியாளருக்கு கொரோனா இருந்த நிலையில் கருணாஸும் இன்று பரிசோதனை செய்து கொண்டார்.
நடிகர் கருணாஸ் பொறுப்புடன் பேச வேண்டும்... பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது... கொங்கு ஈஸ்வரன் அறிவுரை
இதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் அவர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அது போல் பூம்புகார் தொகுதி அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.