சைதாப்பேட்டை தெருவில்.. ஸ்டூலை இழுத்து போட்டு.. மக்களுக்கு வாட்டர் சப்ளை செய்த திமுக மா.சு!
சைதை மக்களுக்கு மா. சுப்பிரமணியன் தெரு தெருவாக தண்ணீர் வழங்கி வருகிறார்
Recommended Video
சென்னை: சைதாப்பேட்டை தெருவில் ஒரு ஸ்டூலையும் இழுத்து போட்டு உட்கார்ந்து, தொகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறார் திமுகவின் மா.சுப்பிரமணியன்!
சைதாப்பேட்டை தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர். திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர்.சென்னை ஐகோர்ட் வக்கீல்!
எப்போதும் படுசுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டே இருப்பவர் மா.சு.தான் என்ற பெயர் பெற்றவர். இவர் மேயராக இருந்தபோது பல செயல்பாடுகள் சென்னையின் கவனத்தை ஈர்த்தது. சைதாப்பேட்டை மக்களுக்கு மிகவும் நெருக்கமான நபர்தான் மா.சு! தொகுதி முழுவதும் இவருக்கு அத்துப்படி!
சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் கடும் வெயிலும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுவதால், திமுகவினர் தங்களால் இயன்ற வரை பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குங்கள்" என்று திமுக தலைவர் சொல்லி இருந்தார். இதனை ஏற்று ஒவ்வொரு தொகுதி, மாவட்டங்களில் திமுகவினர் தண்ணீர் சப்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் எம்பி, எம்எல்ஏ, நிர்வாகி என்ற பேதமெல்லாம் இல்லை. யாரால் தண்ணீர் தர முடிகிறதோ, அவர்களே நேரடியாக வந்து மக்களுக்கு சப்ளை செய்து வருகிறார்கள்.
பிரஷாந்த் கிஷோர் விவகாரத்தில் பரிதவிக்கும் அதிமுக.... நமட்டு சிரிப்புடன் வேடிக்கை பார்க்கும் திமுக!
அப்படித்தான் சைதாப்பேட்டையிலும் நடந்து வருகிறது. அதுவும் மாசு இருக்கிறாரே..தெருவிலேயே ஒரு ஸ்டூலை போட்டு உட்கார்ந்து குழாயில் தண்ணீர் சப்ளை செய்கிறார். தண்ணீரை தெருவில் கொண்டு விட்டு விட்டு சென்று விட்டால் தண்ணீரை விற்பது போன்ற தேவையற்ற பிரச்சினைகள் வருவதால், அவரே நேரடியாக உட்கார்ந்து தண்ணீர் வழங்குகிறாராம்!
எவ்வளவு நேரமானாலும் இந்த வேலைக்கு சளைப்பதே இல்லை. தண்ணீர் விநியோகம் செய்துவிட்டு, அதோடு சும்மா இருப்பதில்லை. ஒவ்வொரு தெருவிலும் சென்று தண்ணீர் கிடைத்ததா என்று அக்கறையுடன் கேட்டு வருகிறாராம்!