சட்டசபை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா.. எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கைது
சென்னை: சட்டசபை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் மேற்கொண்ட எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சட்டசபையில் மானியக் கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி நேற்று விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டசபை மீண்டும் தொடங்கியது.
இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று காலை தொடங்கியது. தொடர்ந்து, கேள்வி நேரம் முடிந்ததற்கு பின்பாக என்.பி.ஆர் குறித்து சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
என்பிஆர் குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாததை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இவர்களை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.
என்ன நடக்கிறது... ஜி.கே.வாசனை உள்ளே கொண்டு வந்து.. அவர் மூலம் ரஜினியை வளைக்க டெல்லி திட்டமா?
இதையடுத்து என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி சட்டசபை வளாகத்தில் தரையில் அமர்ந்து எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தர்ணா போராட்டம் செய்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.